திருக்குறள்

629.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்ப முறுதல் இலன்.

திருக்குறள் 629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்ப முறுதல் இலன்.

பொருள்:

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

மு.வரததாசனார் உரை:

இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.